காதல் வைரஸ்: சொன்னாலும் கேட்பதில்லை
Posted On Oct 13, 2006 at by Prakash G.R.சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது
ஒன்றை மறைத்து வைத்தேன், சொல்ல தடை விதித்தேன்,
நெஞ்சை நம்பி இருந்தேன் அது வஞ்சம் செய்தது
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது
ஓ, கன்னி மனம் பாவம் என்ன செய்ய கூடும்
உன்னைப்போல அல்ல உண்மை சொன்னது
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது
உனைத்தவிர எனக்கு விடியலுக்கோர் கிழக்கு, உலகினில் உள்ளதோ உயிரே
சூரிய விளக்கில் சுடர் விடும் கிழக்கு, கிழக்குக்கு நீ தான் உயிரே
எல்லாம் தெரிந்திருந்தும், என்னை புரிந்திருந்தும்
சும்மா இருக்கும்படி சொன்னேன் நூறு முறை
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது
ஓ நங்கை உந்தன் நெஞ்சம், நான் குடுத்த லஞ்சம், வாங்கிக்கொண்டு இன்று உண்மை சொன்னது
சொன்னாலும், சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது
விழிச்சிறையில் பிடித்தாய், விலகுதல் போல் நடித்தாய்
தினம் தினம் துவண்டேன் தளிரே
நதியென நான் நடந்தேன், அலை தடுத்தும் கடந்தேன், கடைசியில் கலந்தேன் கடலே
எல்லாம் தெரிந்திருந்தும் என்னை புரிந்திருந்தும்
சும்மா இருக்கும்படி சொன்னேன் நூறு முறை
ஓ, பூவெடுத்து நீரில் பொத்தி வைத்து பாரு, வந்து விடும் மேலே வஞ்சிக்கொடியே
சொன்னாலும், சொன்னாலும் கேட்டிடாது கன்னி மனது
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது
சேற்றினில் மலர்ந்த செந்தாமரைகள்
Posted On Oct 11, 2006 at by Prakash G.R.இங்க இருக்கற வரிகள் எல்லாம் நான் எங்க இருந்து சுட்டேன்னு கண்டுபிடிங்க பார்க்கலாம்:
கோபம் கொள்ளும் நேரம்
வானம் எல்லாம் மேகம்
காணாமலே போகும் ஒரே நிலா
கோபம் தீரும் நேரம்
மேகம் இல்லா வானம்
பெளர்னமியாய் தோன்றும் அதே நிலா
உலகத்தின் கடைசியாய்
இன்று தானோ என்பது போல்
பேசி பேசி தீர்த்த பின்னும்
எதோ ஒன்று குறையுதே.
உப்புக்கடலோடு மேகம் உற்பத்தியானாலும்
உப்புத்தண்ணீரை மேகம் ஒரு போதும் சிந்தாது
மலையில் விழுந்தாலும் சூரியன் மரித்து போவதில்லை
நிலவுக்கு ஒளியூட்டி தன்னை நீட்டித்துக்கொள்கிறதே,
மேகமாய் நானும் மாறேனோ
அதன் மேண்மை குணங்கள் காண்பேனோ
சூரியன் போலவே மாறேனோ
என் ஜோதியில் உலகை ஆளேனோ
காற்றில் இலைகள் பறந்த பிறகும்
கிளையின் தழும்புகள் மறைவதில்லை
காயம் நூறு கண்ட பிறகும்
உன்னை உள்மணம் மறப்பதில்லை
கருப்பு-வெள்ளை காலத்துல "அத்தை மடி மெத்தையடி ஆடி விளையாடம்மா"-ன்னு அழகான வரிகளோட வ்ந்துகிட்டிருந்த தமிழ் சினிமா பாடல்கள் எங்கயோ போயி "எப்படி? எப்படி? நீ சமைஞ்சது எப்படி?"-ன்னு கேக்கற மாதிரி பாடல்களோட வர ஆரம்பிச்சிருச்சு. "இப்ப இருக்கற ஆளுகளே செரியில்லப்பா, எங்க காலத்துல எல்லாம்"-ன்னு ஆரம்பிக்கற பெரிசுகளுக்கு ஒரு இன்பர்மேசன்: மேல சொன்ன ரெண்டு பாடல்களையும் எழுதினது ஒரே ஆள் தான். அப்ப பார்க்கறவங்க தரம் கொறஞ்சு போச்சோ? நமீதாவோ இல்ல மும்தாஜோ வந்து ஒரு ஆட்டம் போட்டாதான் படம் ஓடுமோ? அப்படியும் இல்ல. தவமாய் தவமிருந்து கூட ஓடுதே. இந்த தமிழ் மக்களோட ரசனைய புரிஞ்சுக்கவே முடியலபா. என்னமோ போங்க.
ஸ்டேட்பாங்கில அக்கவுண்ட் இல்ல
டாஸ்மாக்கில கடன் வெச்சவன்
இந்த மாதிரி அட்டகாசமான பாட்டுகளுக்கு நடுவே நல்ல சில வரிகளும் எப்படியோ வந்துடுது. அப்படி நான் பார்த்த சில வரிகளத்தான் சுட்டு மேல குடுத்தேன். எந்தெந்த பாட்டுன்னு கேக்கறீங்களா?
- கண்ட நாள் முதலாய் - மேற்கே மேற்கே தான்
- வேட்டையாடு விளையாடு - மஞ்சள் வெய்யில் மாலை
- சாமுராய் - மூங்கில் காடுகளே
- 7ஜி ரெயின்போ காலனி - கண் பேசும் வார்த்தைகள்
முக்கியமா அந்த டாஸ்மாக் வரிகள் சொல்லாம விட்டுட்டானேன்னு திட்டுறவங்களுக்கு - ஆறு படத்தில "சோடா பாட்டில் கையில" பாட்டு
புதுப்பேட்டை: ஒரு நாளில் வாழ்க்கை
Posted On Jul 11, 2006 at by Prakash G.R.ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது
மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது
எத்த்னை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்
அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்
ஓஓஓஓஓஓ, கரு வாசல் தொட்டு வந்த நாள் தொட்டு
ஓஓஓஓஓஓ, ஒரு வாசல் தேடியே விளையாட்டு
ஓஓஓஓஓஓ, கண் திறந்து பார்த்தால் பல கூத்து
ஓஓஓஓஓஓ, கண் மூடிக்கொண்டால்
ஓஓஓஓஓஓ ...
போர்களத்தில் பிறந்துவிட்டோம், வந்தவை போனவை வருத்தமில்லை
காட்டினிலே வாழ்கின்றோம், முட்களின் வலி ஒன்றும் மரணமில்லை
இருட்டினிலே நீ நடக்கயிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும்
நீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்கு துணை என்று விளங்கிவிடும்
தீயோடு போகும் வரையில், தீராது இந்த தனிமை
கரை வரும் நேரம் பார்த்து,கப்பலில் காத்திருப்போம்
எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம்
ஓஓஓஓஓஓ, அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே
ஓஓஓஓஓஓ, இங்கு எதுவும் நிலையில்லை கரைகிறதே
ஓஓஓஓஓஓ, மனம் வெட்ட வெளியிலே அலைகிறதே
ஓஓஓஓஓஓ, அந்த கடவுளை கண்டால்
ஓஓஓஓஓஓ ...
அது எனக்கு இது உனக்கு இதயங்கள் போடும் தனிக்கணக்கு
அவள் எனக்கு இவள் உனக்கு உடல்களும் போடும் புதிர்க்கணக்கு
உனக்குமில்லை இது எனக்குமில்லை, படைத்தவனே இங்கு எடுத்துக்கொள்வான்
நல்லவன் யார், அட கெட்டவன் யார், கடைசியில் அவனே முடிவு செய்வான்
பழி போடும் உலகம் இங்கே,பலியான உயிர்கள் எங்கே
உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்
நடப்பவை
நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்
ஓஓஓஓஓஓ, பல முகங்கள் வேண்டும் சரி மாட்டிக்கொள்வோம்,
ஓஓஓஓஓஓ, பல திருப்பம் தெரியும் அதில் திரும்பிக்கொள்வோம்,
ஓஓஓஓஓஓ, கதை முடியும் போக்கில் அதை முடித்துக்கொள்வோம்,
ஓஓஓஓஓஓ, மறு பிறவி வேண்டுமா
ஓஓஓஓஓஓ ...