யப்பா டைரக்டருங்களா…

"ஒரு கல்லூரியின் கதை" படத்துல ரெண்டு மூணு பாட்டு நல்லா இருக்கும். எப்பவாச்சும் முனுமுனுத்துட்டு இருப்பேன். படம் பார்த்தது இல்ல. சமீபத்துல எதோ டீவீல போட்டாங்க. அம்மணி கூட உக்காந்து பார்த்துட்டு இருந்தேன். கதை என்னமோ கொஞ்சம் வித்தியாசமாத்தான் போச்சு. நடுவுல ஒரு இடத்துல, மனசுல காதல் இருக்கா இல்லையான்னு தெரிஞ்சுக்க, ஹீரோயின் சத்தமே வராம உதட்ட மட்டும் அசைச்சு கூப்பிடுவாங்களாம், கூப்பிட்ட ஒடனே ரொம்ப தூரத்துல இருக்கற ஹீரோவும் கரெக்டா திரும்பி பார்ப்பாரு. எங்க அம்மணி: "நீயும் தான் இருக்கியே. லேப்டாப்ல எதயாச்சும் நோண்டிகிட்டு இருந்தா, அடுத்த ரூம்ல இருந்து காட்டு கத்து கத்துனாலும் காது கேக்காது. ஹூம். அதுக்கெல்லாம் மனசுல சுத்தமான காதல் வரணும்."

யப்பா டைரக்டருங்களா, உங்களோட கற்பனை வளத்தை பாராட்டுறேன், ஆனா இதெல்லாம் கொஞ்சம் ஓவரு.

Posted in Labels: |

0 comments: